சாமோலி, உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றங்கரையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறியதில் 10 பேர் மின்சாரம் தாக்கி பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
அலக்நந்தா ஆற்றங்கரையோரம் பிபல்கோட்டி பகுதியில் நீர் மின்சாரத் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் முகாம் அமைத்து பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அந்த இடத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து மின்சாரம் பாய்ந்ததில் 10 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
தீயில் கருகிய பலரை சக ஊழியர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீயணைப்புப் படையினரும், மின்சாரத் துறையினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஉள்ளதாக சாமோலி போலீஸ் எஸ்பி பர்மேந்திரா தோவல் கூறியுள்ளார். இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில டிஜிபி அசோக் குமார் தெரிவித்துள்ளார்.
CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
{{comments.comment}}