மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின்றன. இதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதலில்த பால் வாக்குகள் எண்ணப்படும். பின்னர் இவிஎம்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். மீண்டும் ஆட்சியமைக்குமா பாஜக.. பாஜகவிடமிருந்து ஆட்சியைத் தட்டிப் பறிக்குமா இந்தியா கூட்டணி.. பரபரக்கும் தேர்தல் முடிவுகளைக் காண தென்தமிழ் இணையதளத்துடன் நேரலையாக இணைந்திருங்கள்.
தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ. மணி வெற்றி பெற்றுள்ளார்.
மதுரை தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சு. வெங்கடேசன் 3,61,287 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடகா- மாண்டியா தொகுதியில் முன்னாள் முதல்வரான எச்.டி குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் வேட்பாளருமான சரன்ஜித் சிங் சன்னி 1,76 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் பெற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
விளங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 35,910 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார்.
ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மட்டுமே 100 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!