புதிய நாடாளுமன்றத்தை சுற்றிப் பார்க்க வந்த தமன்னா!

Meenakshi
Sep 21, 2023,05:36 PM IST
புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பார்வையிட இன்றும் நடிகைகள் பலர் வந்திருந்தனர். தமன்னா, குஷ்பு உள்ளிட்டோர் அவர்களில் அடக்கம்.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் தற்போது செயல்பாட்டுக்கு வந்து விட்டது. இந்த நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே அங்கு "சந்திரமுகி" கங்கனா ரனாவத் உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் சிறப்புப் பார்வையாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.



இந்த நிலையில் இன்று 2வது நாளாக மேலும் பல நடிகைகள் வந்திருந்தனர். நம்ம ஊர் குஷ்பு, "ஜெயிலர்" தமன்னா உள்ளிட்டோர் வந்திருந்தனர். சிவப்பு நிற சேலையில் பளிச்சென காணப்பட்டார் தமன்னா.  புதிய நாடாளுமன்றத்தை சுற்றிப் பார்த்து விட்டு வந்த தமன்னா செய்தியாளர்களிடம் பேசுகையில், "மகளிருக்கான இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சாமானிய மக்களை அரசியலில் ஈடுபட ஊக்குவிக்கும்" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை இதுவரை புதிய நாடாளுமன்றத்திற்கு அரசு அழைக்கவில்லை. அதற்குப் பதில் துறவிகள், சாமியார்கள், மடாதிபதிகள், நடிகைகளை அழைப்பதா என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.