பிக்பாஸ் தமிழ் சீசன் 8 : வெறுப்பை வாரிக் குவித்து வரும் ஜாக்குலின்.. அடுத்த ஆப்பு இவருக்குத்தானா?

Aadmika
Oct 08, 2024,05:12 PM IST

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக நடிகை சாச்சனா வெளியேற்றப்பட்டுள்ளது. அவரை மட்டுமின்றி, வீட்டிற்குள் இருப்பவர்களையும், பார்வையாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதேசமய், ஜாக்குலின்தான் அடுத்து வெளியேறுவார் என்று இப்போதே பலரும் பேச ஆரம்பித்து விட்டனர்.. காரணம், பலரையும் வெறுப்படித்து வருகிறார் அவர்.


விஜய் டிவி.,யின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் அக்டோபர் 06ம் தேதி துவங்கியது. மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர். இந்த போட்டியை இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என சொல்லி ஆட்டத்தை ஆரம்பித்தார்கள். நிகழ்ச்சியின் துவக்க நாளில் 6 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் சென்ற நிலையில் ஆண்கள், பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு, எந்த அறையை யார் எடுத்துக் கொள்வது என்பதில் பிரச்சனையை ஆரம்பித்து வைத்தார் பிக்பாஸ்.




நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சிங்கிள் பெட் அறையை பெண்கள் அணிக்கு விட்டுக் கொடுத்த ஆண்கள் அணி, அதற்கு பதிலாக ஏதாவது ஒரு வாரத்தில் ஆண் போட்டியாளர்கள் யாரையும் நாமினேட் செய்யக் கூடாது என டீல் பேசினர். ஆரம்பத்தில் வந்தவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டாலும், பிறகு வந்த பெண் போட்டியாளர்கள் அதை ஏற்கவில்லை. அதிலும் ஜாக்குலின் ஒரு படி மேலே போய், தன்னுடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்காக அறைக்குள் செல்லாமல் வெளியிலேயே படுக்க ஆரம்பித்தார்.


நிகழ்ச்சியின் துவக்க விழாவிலேயே விஜய் சேதுபதி சொல்லி விட்டார், 24 மணி நேரத்தில் ஒருவர் எலிமினேட் செய்யப்பட உள்ளதாக. ஆனால் இதற்கு முன் கமல் தொகுத்து வழங்கிய சீசன்கள் அனைத்திலும் முதல் வாரத்தில் எலிமினேஷன் கிடையாது. ஆனால் பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் நாளிலேயே நடிகை சாச்சனா வெளியேற்றப்பட்டுள்ளார். மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா, 20 வயது மட்டுமே ஆன சின்னப் பெண். இவர் இந்த சீசனில் மிக முக்கியமான போட்டியாளராக இருப்பார். விஜய் சேதுபதி இவருக்கு ஃபேவர் காட்டுவாரா என பலரும் கேட்டு வந்த நிலையில், முதல் ஆளாக அவர் வெளியேற்றப்பட்டுள்ளதாக பிக்பாஸ் அறிவித்தார்.


இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். கண்ணீடன் சாச்சனா வீட்டை விட்டு வெளியேறிய போது அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர். இருந்தாலும் வைல் கார்டு என்ட்ரியில் இவர் மீண்டும் உள்ளே கொண்டு வரப்படலாம் என சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் கேம் துவங்குவதற்கு முன்பே பெண் போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டு விட்டார். ஆனால் முறைப்படி கேம் விளையாடி, எலிமினேட் ஆகப் போகும் அந்த நபர் யார்? அடுத்து யார் வெளியேற போகிறார்? என்பதை அனைவரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


நிகழ்ச்சி துவங்கிய முதல் நாளிலேயே அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்துள்ளார் ஜாக்குலின். இவர் எடுத்ததற்கெல்லாம் அழுவது அனைவரையும் கடுப்பேற்றி உள்ளது. இவரின் பேச்சு சண்டை ஒரு புறம் நெகடிவாகி உள்ளது. மற்றொரு புறம் அர்னவ், கர்ப்பமான மனைவியை பிரிந்து வரும் போது வராத கண்ணீர், ஒரு நாள் கூட இருக்காத, யாரென்று சரியாக தெரியாத சாச்சனா வெளியேறும் போது வருதா என நெட்டிசன்களின் கேள்விகளுக்கு ஆளாகி இருக்கிறார். அதே போல் தீபக், கிடைக்கிற கேப்ல எல்லாம் ஸ்கோர் செய்ய பார்க்கிறார். அனேகமாக இவர்களில் யாராவது ஒருவர் குறைவான ஓட்டுக்களை பெற்று வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்