திமுக கூட்டணிக்கு 40க்கு 40.. இது பாஜக.விற்கு நாங்க வச்ச செக்.. சொல்கிறார் டி.கே.எஸ். இளங்கோவன்

Aadmika
Jun 09, 2024,10:28 PM IST

சென்னை : பாஜக.,விற்கு நாங்க தேர்தல் மூலம் செக் வைத்துள்ளோம் என திமுக.,வின் டி.கே.எஸ்.இளகோவன் தெரிவித்துள்ளார்.


நேற்று சென்னையில் நடைபெற்ற திமுக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிகேஎஸ் இளங்கோவன், தமிழக லோக்சபா தேர்தலில் நாங்கள் பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம் முதல்வர் ஸ்டாலின் தான். தமிழகம் முழுவதும் அவர் மேற்கொண்ட பிரச்சாரம் தான் எங்களின் இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.




லோக்சபா தேர்தல் மூலம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்க நினைத்த பாஜக.,விற்கு நாங்கள் செக் வைத்துள்ளோம். இது ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம். இந்தியாவின் பன்முகத்தன்மையான ஒரே நாடு ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற அரசியல் சட்டத்தை தங்களுக்குச் சாதகமாகத் திருத்த முயற்சிக்கும் பாஜகவுக்கு இது செக். 


இந்தியா வேற்றுமையில் ஒற்றுமைக்கு பெயர் பெற்றது. அந்த பன்முகத்தன்மையை ஒழித்து, பிரிவினையை ஏற்படுத்த பார்க்கிறது பாஜக. நாட்டின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் நிலைநிறுத்த தீர்மானம் நிறைவேற்றினோம் என்றார்.


மக்கள் வலுவான எதிர்க்கட்சியை தேர்வு செய்துள்ளார்கள் : ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 22 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவுக்கும், பாஜகவிற்கும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. திமுக கூட்டக் கட்சிகளான காங்கிரஸ் 9, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2, மதிமுக, இந்திய முஸ்லீம் லீக் ஆகியன தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்திய அளவிலும் பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.