ஈரோடு கிழக்குத் தொகுதி..எம்எல்ஏவாக பதவியேற்றார் விசி சந்திரகுமார் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

Manjula Devi
Feb 10, 2025,06:07 PM IST

சென்னை:முதல்வர் மு க ஸ்டாலின் முன்னிலையில் ஈரோடு கிழக்குத் தகுதி தொகுதியின் எம்எல்ஏவாக வி.சி சந்திரகுமார் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 


ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது.மொத்தம் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள்  எண்ணப்பட்டன.இதில்  பிரதான கட்சிகளான திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 12 ஆயிரம் அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலை வகித்தார். அதேபோல் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 24,138 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். என்னதான் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தாலும் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 45 பேரும் அத்தொகுதியில்  டெபாசிட்டை இழந்தனர். 




சீதாலட்சுமி விட  திமுக வேட்பாளர் சந்திரகுமார் 91,377 வாக்குகள் அதிகம் பெற்று ஆட்சியை தக்க வைத்தார். அதேபோல் தமிழக தேர்தல் வரலாற்றிலேயே ஈரோடு இடைத்தேர்தலில் நோட்டா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது நினைவிருக்கலாம்.


இந்த நிலையில் திமுக வேட்பாளர் விசி  சந்திரகுமார் அபார வெற்றி பெற்று ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஆனார். இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல் மு க ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து முதல் மு க ஸ்டாலின் அமைச்சர் சந்திரகுமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். 


கடந்த 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் களமிறங்கி தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில் தற்போது திமுக வேட்பாளர் எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்