"பச்சை கவர் பாலுக்குப் பதில் .. டிலைட் பாலா.. இதெல்லாம் ஏற்கவே முடியாது".. வானதி சீனிவாசன்!

Meenakshi
Nov 20, 2023,08:11 PM IST

சென்னை:  ஆவின் பச்சை  உறை பாலை நிறுத்தி விட்டு, அதற்குப் பதில் டிலைட் என்ற பெயரில் புதிய பாலை அறிமுகம் செய்வது ஏற்புடையதல்ல என்று பாஜக மகளிர் அணி தேசியத் தலைவியும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.


ஆவின் நிறுவனம் பல்வேறு உறைகளில் பலவிதமான பாலை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது ஆவின் பச்சை கவர் பால் விற்பனையை நிறுத்தி விட்டு அதற்குப் பதில், ஆவின் டிலைட் என்ற பாலை அறிமுகப்படுத்த ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக  செய்திகள் வருகின்றன.


இதற்கு பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வானதி சீனிவாசனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:




தமிழ்நாட்டில் பச்சை உறை பால் விற்பனையை வரும் 25-ஆம் தேதியுடன் நிறுத்தவும், அதற்கு மாறாக ஆவின் டிலைட் என்ற பாலை அறிமுகம் செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.  ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் ஆவின் நிறுவனத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.


தமிழ்நாட்டில் 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை மாற்றி அதற்கு மாற்றாக 3.5% கொழுப்பு சத்து கொண்ட ஆவின் டிலைட் திணிப்பது தான் மக்கள் மீது அரசுக்கு எவ்வளவு அக்கறை என்பதை தெளிவாக காட்டுகிறது 


ஆவின் நீலம், பச்சை, ஆரஞ்சு வண்ண உறைகளில் விற்கப்படும் பால்களுடன் கூடுதலாக அறிமுகம் செய்திருக்க வேண்டும். அதற்கு பதில் டிலைட் பாலை அறிமுகம் செய்திருக்கக் கூடாது.ஊட்டச்சத்தும் குறைத்து விலையும் ஏற்றி விற்கப்படுவது ஏற்புடையதல்ல 


இந்த மறைமுகமான விலை உயர்வை மக்கள் மீது திணிக்கும் தமிழக அரசின் முடிவை உடனடியாக நிறுத்த  வேண்டும்.  இந்த மறைமுகமான விலை உயர்வை மக்கள் மீது திணிக்கும் தமிழக அரசின் முடிவை உடனடியாக திரும்பபெறவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.