கலையின் கவிதைகள்.. முதுமை காதல்..!!

Su.tha Arivalagan
Feb 14, 2025,04:44 PM IST

- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி





நரைத்த  முடியில் அவளின் அழகைப் பார்...!

சுருங்கிய முகத்தில் அவள் பாசத்தினை பார்..!

தளர்ந்த நடையில் அவள் உழைப்பினை பார்..!

சமைத்த உணவில் அவள் அன்பினை பார்...!!


பார்க்கும்  பார்வையில்  கரிசனம் காட்டு..!!

பேசும் வார்த்தையில்  பரிவினை காட்டு..!!

குறைகளை மறந்து  நிறைகளைப்  பேசு..!!

இருக்கும் வரையில்  இனிமையாய் பேசு..!!


அனைத்து உறவுகளும் அற்று போகும்..!

ஆனால் அவன் அன்புமட்டும் நிலையாகும்..!

அகத்தினில் அணையா காதலை சுமந்து..!

வாழ்வாங்கு வாழ்வதே முதுமை  காதல்..!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)