உம்ரா யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி.. 20 பேர் பலி.. சவூதியில்

Su.tha Arivalagan
Mar 29, 2023,10:14 AM IST
ஆசிர்: சவூதி அரேபியாவில் வெளிநாட்டைச் சேர்ந்த உம்ரா யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் 20 பேர் பலியானார்கள். 29 பேர் படுகாயமடைந்தனர்.

சவூதி அரேபியாவின் ஆசிர் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. மெக்காவுக்கு இந்தப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பாலத்தில் அந்தப் பேருந்து வளைந்தபோது மோதி தீப்பிடித்துக் கொண்டது. பிரேக் பெயிலியரே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.



முதல் கட்ட விசாரணையில் 20 பேர் பலியாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது. 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டும் இதேபோல மெதீனா அருகே ஒரு பஸ் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்ட வெளிநாட்டு உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.