மஞ்சப் பையை எடுக்காதீங்க.. ரேசன் கடைகளுக்கு நாளை விடுமுறை: எதற்காக தெரியுமா?

Meenakshi
Nov 24, 2023,01:26 PM IST

சென்னை:  தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் ரேசன்கடைகள் அனைத்தும் விடுமுறை இன்றி இயங்கின. அதை சரிக் கட்டும் விதமாக நாளை ரேசன் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 3ம் தேதி  முதல் நவம்பர் 10ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன்கடைகளும் விடுமுறை இல்லாமல் இயங்கின. தீபாவளி பண்டிகையின் போது  அனைத்து பொருட்களும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக வார விடுமுறை நாட்களிலும்  அனைத்து ரேசன்கடைகளும் செயல்பட உணவுத்துறை உத்தரவிட்டிருந்தது. 




அந்த  விடுமுறை பின்னர் விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தீபாவளி பண்டிகைக்காக விடுமுறை இன்றி வேலை செய்ததற்காக நவம்பர் 13, 25 ம் தேதிகளில் ரேசன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.  கடந்த 13ம் தேதி அன்று ரேசன் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நாளை நவம்பர் 25ம் தேதி  ரேசன்  கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.


எனவே மஞ்சப் பைகளுடன் நாளை கடைகளுக்குக் கிளம்பி விடாதீர்கள் மக்களே!