தமிழ்நாட்டில் உள்ள .. ஐந்து டோல்கேட்டுகளில் .. வரும் ஏப்ரல் 1 முதல் அதிரடி கட்டண உயர்வு..!

Manjula Devi
Mar 23, 2024,12:21 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 5 டோல்கேட்டுகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.


 ஒருமுறை பயணம் செய்து ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூபாய் 5 முதல் 20 ஆகவும், மாதாந்திர பாஸ் கட்டணம் ரூபாய் 100 முதல் 400 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது வரும் ஏப்ரல் ஒன்று முதல் அமலுக்கு வர இருக்கிறது.




தமிழக நெடுஞ்சாலைகளில் மொத்தம் 50 டோல்கேட்கள் உள்ளன. இங்கு கார், வேன், கனரக வாகனம் உள்ளிட்டவைக்கு தனித்தனியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் பராமரிப்பு பணிக்காக ஆண்டுக்கு இருமுறை கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். 


இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரியலூர் டூ மானகெதி, திருச்சி டூ கல்லக்குடி, வேலூர் டூ வல்லம், திருவண்ணாமலை டூ இனம்கரியாந்தல், விழுப்புரம் டூ தென்னமாதேவி, ஆகிய ஐந்து டோல்கேட்டுகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. 


இதில் ஒரு நாளைக்கு ஒரு முறை பயணம் செய்து திரும்பி வருவதற்கான கட்டணம் ரூபாய் ஐந்து முதல் 20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூபாய் 100 முதல் 400 வரை உயர்த்தப்பட்டுள்ளது.