மிலாடி நபி.. செப்டம்பர் 16ம் தேதிக்குப் பதில் 17ம் தேதி விடுமுறை.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Su.tha Arivalagan
Sep 09, 2024,06:21 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 17ம் தேதிதான் மிலாது நபி கொண்டாடப்படவுள்ளதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 16ம் தேதிக்குப் பதில் 17ம் தேதி விடுமுறை விடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


முஸ்லீம் சமுதாயத்தினரின் முக்கிய விழாக்களில் ஒன்று மிலாடி நபி. அதாவது நபிகள் நாயகத்தின் பிறந்த நாள்தான் மிலாடி நபியாக கொண்டாடப்படுகிறது. 




மிலாடி நபியையொட்டி மத்திய அரசு தனது அலுவலகங்களுக்கு செப்டம்பர் 17ம் தேதியை ஏற்கனவே விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் செப்டம்பர் 16ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அன்றைய தினம் தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. ஆனால் தற்போது 17ம் தேதிதான் மிலாடி  நபி கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜியார் அறிவித்துள்ளார். இதையடுத்து தமிழ்நாடு அரசு தனது விடுமுறையை 17ம் தேதி மாற்றி அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்