நீங்க "குடிப்பீங்களா"?.. அப்ப உங்களுக்குத்தான் இந்த நியூஸ்!

Su.tha Arivalagan
Aug 12, 2023,07:13 PM IST
 சென்னை: சுதந்திர தினத்தன்று டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா வருகிற 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. வழக்கம் போல இந்த முறையும் வீடுகள், அலுவலகங்கள் தோறும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினத்தைக் கொண்டாடுமாறு மக்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மக்களும் வழக்கத்தை விட அதிக உற்சாகத்துடன் வருகிற சுதந்திர தினத்தைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். மணிப்பூர் கறை ஒரு பக்கம் மனதை வறுத்தினாலும், சுதந்திர தினம் மக்களிடையே ஆர்வத்தையும் ஏற்படுத்துவதாகவே உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் சுதந்திர தினத்தன்று மதுக் கடைகளையும், பார்களையும் மூட வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.  மாநிலம் முழுவதும் இது கண்டிப்பகா கடைப்பிடிக்க வேண்டும். யாராவது திறந்து வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

15ம்  தேதி கடைகள் மூடப்படும் என்பதால் குடிக்கும் பழக்கம் உடையோர் 14ம் தேதி கடைகளை முற்றுகையிட்டு சரக்குகளை அதிக அளவில் வாங்குவார்கள் என்பதால் அன்றைய தினம், அதிக அளவிலான சரக்கு பாட்டில்களை இருப்பில் வைத்துக் கொள்ள மதுக் கடைகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.