மது பிரியர்களே.. தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 3 நாட்களுக்கு கடையடைப்பு!

Manjula Devi
Apr 01, 2024,12:48 PM IST


புதுச்சேரி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டும் என புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள ஜூன் 4ஆம் தேதியும் அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.


இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் திருவிழா நடைபெற உள்ளது. இதில்  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அன்று வாக்குப்பதிவு காலை 6 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். இதனை அடுத்து லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் நான்காம் தேதியும், அனைத்து மதுக் கடைகளும் மூட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.




அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 17 முதல் 19ஆம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளன்று ஜூன் 4ஆம் தேதியும் அனைத்து டாஸ்மாக்களும் மூடப்படும் என தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் புதுச்சேரியிலும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுவதை அடுத்து, புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டும் என புதுச்சேரி அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை அனைத்து வகையான மதுக் கடைகளும் மூட வேண்டும். 


வாக்குப்பதிவு நாளான ஜூன் நான்காம் தேதியும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.