ஜில் ஜில் மழை.. இன்னிக்கு ராத்திரியும் இருக்கு.. சென்னை முதல் தஞ்சாவூர் வரை..!

Su.tha Arivalagan
Aug 22, 2023,10:56 AM IST

சென்னை: சென்னை முதல் தஞ்சாவூர் வரை இன்று இரவு முதல் நாளை காலை வரை பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.


வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே 25ம் தேதி வரை பரவலாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது நினைவிருக்கலாம். இந்த நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை பெய்தது.




இந்த மழை இன்று இரவும் இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்  இன்று இரவு முதல் மறு நாள் காலை வரை பரவலாக மழை இருக்கும். பிற மாவட்டங்களைப் பொறுத்தவரை காவிரி டெல்டா, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், திருவண்மாமலை, தஞ்சாவூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை இருக்கும்.


ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் ஆகிய மலை வாசஸ்தலங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கும் வாய்ப்புண்டு என்று அவர் தெரிவித்துள்ளார்.