பிளஸ் 1 தேர்வு முடிவுகள்.. 90.33% பேர் தேர்ச்சி.. மாணவிகளே வழக்கம் போல முதலிடம்!
May 19, 2023,12:58 PM IST
சென்னை: பிளஸ் 1 தேர்வில் 90.33 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல மாணவிகளே அதிக அளவில் பாஸ் ஆகியுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் பிளஸ் ஒன் தேர்வுகள் நடைபெற்றன. 7.76 லட்சம் பேர் தேர்வுகளை எழுதியிருந்தனர். இந்தத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 90.33 சதவீதம் பேர் பாஸாகியுள்ளனர். கடந்த ஆண்டை விட இது 0.8 சதவீதம் அதிகமாகும்.
வழக்கம் போல மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். 94.36 சதவீத மாணவிகளும், 86.99 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டிலேயே அதிக அளவாக 96.38 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் முதலிடம் பெற்றது. 2வது இடத்தை ஈரோடு மாவட்டம் பெற்றது. அங்கு 96.18 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி அடைந்தனர். அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 84.97 சதவீதமாக உள்ளது.
பாடவாரியாக நூற்றுக்கு நூறு வாங்கியோர் பட்டியல்:
தமிழ் 9
ஆங்கிலம் 13
இயற்பியல் 440
வேதியியல் 107
கணிதம் 17
கம்ப்யூட்டர் சயின்ஸ் 940
கணக்குப் பதிவியியல் 995