தூத்துக்குடியில்.. ஆவின் பால் சப்ளையை சீர்படுத்த.. 12 கூடுதல் அலுவலர்கள் நியமனம்!

Su.tha Arivalagan
Dec 20, 2023,06:02 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் விநியோகத்தில் பிரச்சினைகளை சரி செய்வதற்காக கூடுதலாக 12 அலுவலர்களை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.


மொத்தம் உள்ள 6 ஒன்றியங்களுக்கும் தலா 2 அலுவலர்களை கூடுதலாக அரசு நியமித்துள்ளது. இந்த 12 பேரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பணிகளைத் தொடங்கி விட்டனர்.




இதுதொடர்பாக தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தூத்துக்குடியில் அதிகமாக  வெள்ளப்பாதிப்பிற்குள்ளான திருவைகுண்டம், சாத்தான்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், கருங்குளம், ஆழ்வார்திருநகரி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பால் விநியோகம் சீரடையும் பொருட்டு திருச்சி, மதுரை, கடலூர், விருதுநகர், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒன்றிய பால் கூட்டுறவு அலுவலர்களுடன் நடைபெற்ற திட்டமிடல் கூட்டத்தில், கீழ்காணும் அலுவலர்கள் கூடுதலாக ஒன்றியவாரியாக  நியமிக்கட்டிருக்கிறார்கள். 


கருங்குளம் ஒன்றியம்:


1.  திவான் ஒலி - 6381987805, 

2. கந்தசாமி -  8754304858


திருவைகுண்டம் ஒன்றியம்:


1. சாந்தா - 8754228264

2. ஃபரூக் - 9597277945


சாத்தான்குளம் ஒன்றியம்:


1. சாய் சுதர்சன் - 9840505277

2. ஜெயபால் - 9487123266


ஆழ்வார்திருநகரி ஒன்றியம்:


1. லட்சுமணன் - 8667528802

2. பால்துரை - 6385469077


திருச்செந்தூர் ஒன்றியம்:


1. ராதாகிருஷ்ணன் - 9566209339

2. முத்துகுமார் - 8148390153


தூத்துக்குடி ஒன்றியம்:


1. சங்கர் ராமன் - 8489491500

2. வேளாங்கண்ணி - 8903257923