மோடியை அப்பாவாக பார்த்தேன்.. துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி.. காயத்ரி ரகுராம் ஆவேசம்

Su.tha Arivalagan
Jan 14, 2023,10:47 AM IST
சென்னை: துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி. நான் பிரதமர் நரேந்திர மோடியை அப்பாவாக பார்த்தேன்.. ஆனால் எனக்கு பாஜக பாதுகாப்பு தர மறுத்து விட்டது என்று நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.



நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் ஆவேசமாக கூறியிருப்பதாவது:

என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி. என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி. என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி.  என்னை மானபங்கம் செய்ததற்கு நன்றி. என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி.  எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னைத் தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி.

என்னால் திரும்பக் கொண்டு வர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி. என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி. பாதுகாப்பை தராததற்கு நன்றி. எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி. நீதி வழங்காததற்கு மிக்க நன்றி.

கடவுள் உங்களைப் பார்த்துக் கொள்வார். நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். நான் என் தர்மத்தை நிலை நாட்டுவேன். விரைவில் களத்தில் சந்திப்போம் என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

மோடியை அப்பாவாக நினைத்தாகவும் அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.