ஆகவே மக்களே, செப்டம்பர்  22 முதல் அக்டோபர் 2ம் தேதி வரை.. என்ன மேட்டர் தெரியுமா?

Su.tha Arivalagan
Aug 28, 2023,01:11 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் செப்டம்பர் 22ம் தேதி பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. அக்டோபர் 2ம் தேதி வரை இந்த விடுமுறை நீடிக்கும்.

தமிழ்நாடு முழுவதும் தற்போது காலாண்டுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர். தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அதாவது 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 14ம் தேதி காலாண்டுத் தேர்வுகள் தொடங்குகின்றன. அதேபோல 6ம் வகுப்பு முதல்  10ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கு செப்டம்பர் 18ம் தேதி தேர்வுகள் தொடங்குகின்றன.



பிளஸ் 1 மற்றும் பிளஸ்டூ மாணவர்களுக்கு செப்டம்பர் 15ம் தேதி காலாண்டுத் தேர்வுகள் தொடங்கி நடக்கும். இதைத் தொடர்ந்து காலாண்டு விடுமுறைகள் தொடங்கும். 1ம் வகுப்பு முதல் 3 ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 22ம் தேதி தொடங்கி அக்டோபர் 2ம் தேதி வரை விடுமுறை விடப்படும். 4 டூ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 27ம்  தேதி தொடங்கி அக்டோபர் 3ம் தேதி வரை காலாண்டு விடுமுறை விடப்படும்.

காந்தி ஜெயந்தியுடன் காலாண்டு விடுமுறை முடிவுக்கு வந்து அக்டோபர் 3ம் தேதியிலிருந்து பள்ளிகள் மீண்டும் இயங்கத் தொடங்கும்.