கொஞ்ச நாளைக்கு அப்படியே வெயில்ல காய்ங்க.. 19ம் தேதிக்குப் பிறகு நனையலாம்.. வெதர்மேன் ஜில் நியூஸ்!

Su.tha Arivalagan
Sep 14, 2024,01:12 PM IST

சென்னை:   தமிழ்நாட்டில் 19ம் தேதி வரைக்கும் வெயில் நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதன் பிறகு  மழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் வெயில் கொளுத்துகிறது. அட்டே மறுபடியும் சம்மர் வந்துருச்சா என்று மண்டையைப் போட்டுக்  குழப்பிக்கிற அளவுக்கு வெயில் வெளுக்கிறது. பல ஊர்களில் 100 டிகிரி அளவுக்கு வெயில் வறுத்தெடுப்பதால் மக்கள் புழுக்கத்தில் உள்ளனர்.




குறிப்பாக மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் தொடர்ந்து 100 டிகிரி அளவுக்கு வெயில் வெளுக்கிறது. சென்னையிலும் கூட பகல் முழுக்க நல்ல வெயில் கொளுத்துகிறது. இதே நிலைதான் பல்வேறு பகுதிகளிலும் நிலவுகிறது.


இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு குட்நியூஸ் சொல்லியுள்ளார். அதாவது இன்னும் சில நாட்கள் இந்த வெயில் தொடருமாம். அதேசமயம், வருகிற 19, 20ம் தேதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக அவர் ஹேப்பி நியூஸ் சொல்லியுள்ளார். இதுதவிர வேறு அப்டேட் எதுவும் அவர் தரவில்லை. அதேசமயம், 19, 20ம் தேதிக்குப் பிறகு வெயில் வெகுவாக குறைய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.


இதற்கிடையே, வட கிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. இதுதொடர்பான பல்வேறு கால்வாய், வாய்க்கால் சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் பல்வேறு துறை அதிகாரிகளுடன் இதுதொடர்பான ஆலோசனையையும் மேற்கொண்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்