அடித்து நொறுக்கும் போர்க்களமாக சிந்துவும் வைகையும்.. சு. வெங்கடேசன் பெருமிதம்!

Su.tha Arivalagan
Mar 06, 2023,02:38 PM IST
மதுரை: கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட எலும்புத்துண்டுகளை பகுப்பாய்வு செய்து அடித்து நொறுக்கும் போர்க்களமாக சிந்துவும் வைகையும் இருக்கிறது. எனவேதான் “கீழடி எங்கள் தாய்மடி” என்று உரக்கச்சொன்னோம் என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.



மதுரை கீழடியில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.  ரூ. 25 கோடியில் அமைக்கப்பட்ட இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வத்தார்.

வடமாநிலத்தவர் மீது தாக்குதல்...சிபிஐ விசாரணை கேட்கும் அண்ணாமலை


இதுகுறித்து சு.வெங்கடேசன் இன்று போட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

அரசியல் சாசனத்தின் முதல் அத்தியாயத்தின் முதல் படம் திமிலுள்ள காளை.  அது சிந்துவெளிநாகரிகத்தின் அடையாளம். அதே திமிலுள்ள காளை தான் கீழடி அருங்காட்சியத்திலும் துள்ளிகுதிக்கிறது.

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட எலும்புத்துண்டுகளை பகுப்பாய்வு செய்து அடித்து நொறுக்கும் போர்க்களமாக சிந்துவும் வைகையும் இருக்கிறது.

எனவேதான் “கீழடி எங்கள் தாய்மடி” என்று உரக்கச்சொன்னோம். விடாது குரலெழுப்பினோம். அனைத்து தளத்திலும் அனைவருடனும் இணைந்து செயல்பட்டோம். இந்த அரசியல் செயல்பாட்டிற்காக நேற்று நடந்த கீழடி அருங்காட்சியக திறப்புவிழாவில் தமிழக முதலமைச்சரால் சிறப்பு செய்யப்பட்டது மகிழ்ச்சி என்று அவர் கூறியுள்ளார்.