இலங்கையை உலுக்கிய நிலநடுக்கம்.. 6.2 ரிக்டர்.. மக்கள் பீதி.. சுனாமி அபாயம் இல்லை!

Su.tha Arivalagan
Nov 14, 2023,03:24 PM IST

- மஞ்சுளா தேவி


கொழும்பு: இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.


இலங்கையில், இந்தியப் பெருங்கடலில் இன்று பிற்பகலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.2ஆக பதிவானது. தலைநகர் கொழும்பில் இருந்து தென் கிழக்கே 1326 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.


இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் எந்தப் பாதிப்பையும் இலங்கை சந்திக்கவில்லை. அதேசமயம், அதிர்வுகள் உணரப்பட்டன. 




உயிர்ச் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாகவும் தகவல் இல்லை. அதேசமயம், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.