வருத்தப்படாதீர்கள் வாலிபர்களே.. மீண்டும் வருகிறார் ஸ்ரீதிவ்யா.. மெய்யழகன் கார்த்தியுடன் கை கோர்த்து!

Manjula Devi
Aug 24, 2024,12:58 PM IST

சென்னை: நீண்ட நாட்களுக்குப் பிறகு நாயகியாக கமிட்டாகியுளள்ள நடிகை ஸ்ரீதிவ்யா, மெய்யழகன்  படத்தின் டப்பிங் பணியில் ஈடுபட்டு வருகிறார்.


தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் ஸ்ரீ திவ்யாவின் லதா பாண்டி என்ற கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவருடைய நடிப்பு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தமிழில்  நடித்த முதல் படமே இவருக்கு  திருப்புமுனையாக அமைந்தது. 




இதன் பின்னர் இசையமைப்பாளர் ஜி. வி பிரகாசுக்கு ஜோடியாக பென்சில் படத்தில் நடித்தார். பின்னர் இவருக்கு பட வாய்ப்பு தொடர்ந்து வரவே ஈட்டி, காக்கி சட்டை, வெள்ளக்காரத்துரை, மருது உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இப்படங்கள் மூலம் ஸ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைளில் ஒருவராக திகழ்ந்தார். இதனிடையே ஸ்ரீ திவ்யா சினிமாவில் சில காலமாக தலை காட்டாமல் இருந்து வந்தார்.


இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மெய்யழகன் என்ற படத்தில் கமிட்டாகி உள்ளார். இப்படத்தில் கார்த்தி  நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார்.இது கார்த்தியின் 27-வது படமாகும். இவர்களுடன் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.


சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வர  இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீண்டும் நாயகியாக கம்பேக் கொடுத்த ஸ்ரீதிவ்யா மெய்யழகன் படத்தின்  டப்பிங்கில் விறுவிறுப்பாக பணியாற்றி வருகிறார். தற்போது இவர் டப்பிங் பேசுவது போன்ற புகைப்படம்  வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்