கும்பாபிஷேகம், தைப்பூசம் எதிரொலி.. பழனிக்கு 5 நாட்கள் சிறப்பு ரயில்கள்

Su.tha Arivalagan
Jan 27, 2023,10:10 AM IST
மதுரை: பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூசத் தொடக்க விழாவையொட்டி பழனிக்கு 5 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.



பழனியில் இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அதேபோல ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பழனிக்கு மதுரை, திண்டுக்கல், கோவையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். நேற்று முதல் இவை தொடங்கியுள்ளன.

மதுரையிலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு, சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக 12.30 மணிக்கு பழனி வந்தடையும்.

பழனியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை சென்றடையும்.

கோவை-திண்டுக்கல் சிறப்பு ரயில் காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியக 11.38 மணிக்கு பழனி வந்து சேரும். மறுமார்க்கத்தில் பழனியில் இருந்து 11.43 மணிக்கு புறப்பட்டு ஒட்டன்சத்திரம் வழியாக 1 மணிக்கு திண்டுக்கல் போய்ச் சேரும். 

திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.55 மணிக்கு பழனி வந்து சேரும். மறுமார்க்கத்தில், 3 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கோவையை சென்றடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.