தென் ஆப்பிரிக்காவிலிருந்து.. மத்தியப் பிரதேசத்திற்கு வரும்.. 12 சிறுத்தைகள்!

Su.tha Arivalagan
Feb 17, 2023,04:26 PM IST
போபால்: தென் ஆப்பிரிக்காவிலிருந்து 12 சிறுத்தைகள், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு பிப்ரவரி 18ம் தேதி வருகின்றன.



12 சிறுத்தைகளில் 5 பெண் சிறுத்தைகள் ஆகும்.  தென் ஆப்பிரிக்காவிலிருந்து சிறுத்தைகளை அன்பளிப்பாக கோரியிருந்தது இந்தியா. இதையடுத்து தற்போது இந்த சிறுத்தைகளை தென் ஆப்பிரிக்கா நமக்கு வழங்கவுள்ளது. 

சிறுத்தைகள் வந்து சேர்ந்ததும் அவை குனோ தேசிய பூங்காவில் விடப்படும். சிறுத்தைகளை பூங்காவுக்குள் திறந்து விடும் நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர்யாதவ், முதல்வர் சிவராஜ் சிங் செளகான் ஆகியோர் கலந்து கொள்வார்கள். குனோ தேசியப் பூங்கா, சம்பல் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 

கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி, தனது 72வது பிறந்த நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, இதே குனோ தேசியப் பூங்காவில், நமீயாவிலிருந்து வருகை தந்த 8 கருஞ்சிறுத்தைகளை திறந்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.  அதில் ஐந்து பெண் ஆகும்.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து 12 சிறுத்தைகளையும் கொண்டு வருவதற்காக, இந்திய விமானப்படை விமானம் தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இந்த சிறுத்தைகள் நேராக குவாலியலிர் உள்ள விமானப்படைத் தளத்திற்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.