பொங்கலோ பொங்கல்.. அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1000 பரிசு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Meenakshi
Jan 09, 2024,05:59 PM IST

சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்புடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் முதல்வர் மு. க. ஸ்டாலின்.


ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் கடைகளில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ரொக்கப் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. 


ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகுப்புடன், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையிலும் பொங்கல் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.





அதேசமயம், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்களுக்கு பொங்கல் பரிசு ரூபாய் 1000 ரொ க்கம் வழங்கப்பட மாட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000  வழங்க வேண்டும் என பவ்வேறு தரப்பினறும் வலியுறுத்தி வந்தனர்.


இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று  வரம்பு ஏதும் இன்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 1000 வழங்கப்படும் என முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவையும் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 


பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு பொதுமக்கள் ரேஷன் கடைகளில் கூட்டமாக கூடி விடக்கூடாது என்பதற்காக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.