மக்களே ரெடியா.. அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில்.. டமால் டுமீல்.. மிதமான மழைக்கு வாய்ப்பு!

Manjula Devi
Aug 08, 2024,05:33 PM IST

சென்னை:    தமிழ்நாட்டில் அடுத்த ஆறு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் வெட்கை தணிந்து தற்போது குளுமையான சூழல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.




இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த ஆறு நாட்களுக்கு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பரவலாக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


அடுத்த இரண்டு மணி நேரத்தில் மழை: 


சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த  இரண்டு மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளது.


இந்திய வானிலை ஆய்வு மையம்: 


தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல் கேரளா மற்றும் கர்நாடகாவிலும் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. அருப்புக்கோட்டை, திருமயம், கோவிலாங்குளத்தில் தலா 7 சென்டிமீட்டர் மழையும், ஜெயங்கொண்டம் மற்றும் திருச்சுழியில் தலா 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.