78 வது சுதந்திர தினம்.. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு‌.. நாட்டு மக்களுக்கு இன்று சிறப்பு உரை

Manjula Devi
Aug 14, 2024,12:06 PM IST

புதுடெல்லி:   78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று இரவு 7 மணிக்கு  மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார்.


நாடு முழுவதும் நாளை 78வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடபடவுள்ளது. அன்று செங்கோட்டையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கொடியேற்றி நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்ற இருக்கிறார். இதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருவதுடன் நாட்டின் பாரம்பரித்தை நினைவுக் கூறும் வகையில் விதத்தில் கலைக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் ஒத்திகை நிகழ்த்தி வருகின்றனர்‌.




இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்ற இருக்கிறார். அகில இந்திய வானொலி மற்றும் தூா்தா்ஷன் சேனல்களில் இரவு 7 மணிக்கு அவரது உரை ஒளிபரப்பு செய்யப்படும். இந்த ஒளிபரப்பு முதலில் இந்தியிலும், பின்பு ஆங்கிலத்திலும் மொழி பெயா்ப்பு செய்து ஒளிபரப்பாகும்.


இதனை தொடர்ந்து பிராந்திய தூா்தா்ஷன் சேனல்களில் இரவு 9.30 மணியளவில் அந்தந்த பிராந்திய மொழிகளில் குடியரசுத் தலைவரின் உரை ஒளிபரப்பப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்