பிறந்த நாளில் ஒரு தாய்க்கு பிள்ளையானாய்.. நினைவு நாளில் தாய்த் தமிழ் நாட்டுக்கே மகனானாய்.. வைரமுத்து

Meenakshi
Aug 07, 2024,02:30 PM IST

சென்னை:   முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, கவிஞர் வைரமுத்து எக்ஸ் தள பதிவில் நினைவாஞ்சலி செலுத்தியுள்ளார்.


முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் 6ம் ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் சென்னை ஓமந்தூர் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். 




கவிஞர் வைரமுத்துவும் கலைஞரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினார். அத்துடன் எக்ஸ் பக்கத்தில் கலைஞரின் நினனவை கூறும் வண்ணம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


உன் 

பிறந்தநாளுக்கும்

நினைவுநாளுக்கும்

வேறுபாடு ஒன்றுண்டு


நீ பிறந்த நாளில்

ஒரே ஒரு தாய்க்கு மட்டுமே

பிள்ளையாகினாய்


நினைவு நாளில்

தாய்த் தமிழ் நாட்டுக்கே

மகனாகினாய்


குடகுமலை மழையால்

மேட்டூர் நீர்மட்டம்

உயர்வது மாதிரி

ஒவ்வோர் ஆண்டிலும்

உன் புகழ்மட்டம்

கூடிக்கொண்டே போகிறது


வணங்குகிறோம் உங்களை;

வாழ்த்துங்கள் எங்களை என்று கூறியுள்ளார்.