வெள்ள பாதிப்புக்குள்ளானோருக்கு உதவ.. நீங்களும் தாராளமாக நிதியுதவி செய்யலாம்!

Su.tha Arivalagan
Dec 08, 2023,06:17 PM IST

சென்னை: மிச்சாங் புயல் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உதவ, அரசுக்கு தாராளமாக உங்களது நிதியுதவியை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


மிச்சாங் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டுப் போயுள்ளது. தமிழ்நாட்டில் அது கரையைக் கடக்கவில்லை என்றாலும் கூட பெரும் மழையைக் கொண்டு வந்து விட்டது. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர்களில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் பாதிப்பைச் சந்தித்தன. இன்னும் அவை பாதிப்பிலிருந்து முழுமையாக மீளவில்லை.


இந்த நிலையில் பொதுமக்கள், அரசின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. நீங்கள் நிதியுதவி செய்ய விரும்ம்பினால் கீழ்க்கண்ட தகவல்களைப் பயன்படுத்தி நிதியுதவியை அனுப்பலாம்.




வங்கி பெயர் - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

கிளை - தலைமைச் செயலகம், சென்னை - 600 009

சேமிப்புக் கணக்கு எண் - 117201000000070

IFS Code - IOBA0001172

MICR Code - 600020061

CMPRF PAN - AAAGC0038F

UPI - VPA ID: tncmprf@iob

https://cmprf.tn.gov.in


வெளிநாடுவாழ் மக்கள் கீழ்க்கண்ட SWIFT Code-ஐப் பின்பற்றிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

IOBAINBB001 Indian Overseas Bank, Central Office, Chennai.