சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில்.. துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.. பவன் கல்யாண்

Manjula Devi
Jun 14, 2024,04:16 PM IST

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசில் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார் பவன் கல்யாண்.


ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதற்கு நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த இந்தக் கூட்டணி, லோக்சபா தொகுதிகளையும் அள்ளியது. 


சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 135 இடங்களிலும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. முதல்வராக சந்திரபாபு நாயுடு நேற்று பதவி ஏற்றார். கூடவே பவன் கல்யாண் உள்ளிட்ட அமைச்சர்களும் பதவியேற்றனர். 




இன்று  அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி பவன்கல்யான் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு ஊரக நலத்துறை உள்ளிட்ட இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.