நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கியது.. 5 நாட்கள் நடைபெறும்

Su.tha Arivalagan
Sep 18, 2023,11:27 AM IST

டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்  தொடர் இன்று தொடங்கியது. 5 நாட்களுக்கு இந்த கூட்டத் தொடர் நடைபெறும்.


நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மத்திய அரசு கூட்டியுள்ளது. 5 நாட்கள் வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாறு குறித்து இன்று முக்கிய விவாதம் நடைபெறவுள்ளது. மேலும் சில முக்கிய மசோதாக்களும் நிறைவேற்றப்படவுள்ளன.


இந்த கூட்டத் தொடர்  குறித்து பல்வேறு சலசலப்புகள் நிலவுகின்றன. இந்த நிலையில்தான் இன்று கூட்டத் தொடர் தொடங்கியது. இரு அவைகளும் கூடியதும் இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் முழுக்கமிட்டனர். இதனால் சிறிது நேரம் அமளி நிலவியது. அதைத் தொடர்ந்து கூட்டம் தொடங்கியது.





லோக்சபா கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். அவர் உரை நிகழ்த்தவுள்ளார். இன்றைய கூட்டம் பழைய நாடாளுமன்றக் கட்டத்தில் தொடங்கியுள்ளது. பிற கூட்டங்கள் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளன.