மக்களே பாத்து இருங்க.. பாளையங்கோட்டையில்.. 8 மணி நேரத்தில் 260 மி.மீட்டர் கொட்டித் தீர்த்த மழை!

Su.tha Arivalagan
Dec 17, 2023,06:54 PM IST

திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டையில் காலை 8.30 மணி முதல் மாலை 4. 30 மணி வரையிலான 8 மணி நேரத்தில் 260 மில்லி மீட்டர் அளவுக்கு கன மழை கொட்டித் தீர்த்துள்ளது.


நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று  இரவு முதல் மழைவெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் இன்று காலை முதல் கன மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களின் பல பகுதிகளில் வெள்ளக்காடாகியுள்ளது.


இந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டையில் காலை எட்டரை மணி முதல் மாலை 4.30 மணி வரை 8 மணி நேரத்தில் 260 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் பாளையங்கோட்டையின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளன. அதேபோல மூலக்கரைப்பட்டியிலும் 260 மில்லி மீட்டர் மழை வெளுத்து வாங்கியுள்ளது. நம்பியார் அணைப் பகுதியில் 252 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவானது. கொடுமுடியாறு அணைப் பகுதியிலும்  201 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.




அம்பாசமுத்திரம் 201, சேரன்மாதேவி 236, நாங்குநேரி 220, பாபநாசம் 219, ராதாபுரம்  209 மில்லி மீட்டர் மழை கொட்டியுள்ளது. நெல்லையில் 162 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.  தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாளை காலைக்குள் இந்த இடங்களில் எல்லாம் 300 மில்லி மீட்டருக்கு மேல் பதிவாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


இதில் மாஞ்சோலைப் பகுதியில் பிற்பகல் 3 மணி வரை 286 மில்லி மீட்டர் அளவுக்கு பேய் மழை பெய்துள்ளது என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.