மழை நிலவரம்: இன்று 4 மாவட்டங்களில்.. மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை - வானிலை மையம்

Manjula Devi
May 22, 2024,10:34 PM IST

சென்னை: தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் இன்றும், நாளையும் தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என கூறியுள்ள நிலையில், இன்று நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தென்மேற்கு வங்கக்கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாலும், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுதாலும் தமிழகத்தில் பரவலாக இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இன்று மிக கனமழை:




நீலகிரி, திருப்பூர், கோவை, மற்றும் தேனி ஆகிய நான்கு இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இப்பகுதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களிலும் ஏற்கனவே ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இன்று கனமழை:


தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர்,கடலூர், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருவாரூர், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஆகிய 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை மிக கனமழை:


தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளை கன மழை:


ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னையை பொருத்தவரை அடுத்து 48 மணி நேரத்தில் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் ஆழியாரில் 15 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருப்பூர் திருமூர்த்தி அணையில் 14 சென்டிமீட்டர் மழை பதிவானது.