அக்டோபர் 22 - துயரங்களை உடனடியாக  போக்கும் நவராத்திரி 8 ம் நாள் வழிபாடு

Aadmika
Oct 22, 2023,09:42 AM IST

இன்று அக்டோபர் 22, 2023 - ஞாயிற்றுகிழமை

சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 5

திருவோணம், வளர்பிறை அஷ்டம், மேல்நோக்கு நாள்


இன்று மாலை 05.36 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. மாலை 05.11 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 06.15 முதல் 07.15 வரை

மாலை - 03.15 முதல் 04.15 வரை


கெளரி நல்ல நேரம் : 


காலை - 10.45 முதல் 11.45 வரை 

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 மணி வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


தோட்டம் அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு, மரம் நடுவதற்கு, கட்டிட மதில் சுவர் கட்டுவதற்கு நல்ல நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


இன்று திருவோணம் என்பதால் திருமாலையும், வளர்பிறை அஷ்டமி என்பதால் சிவ பெருமானையும் வழிபட குழப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும். நவராத்திரியின் 8 ம் நாளான இன்று அம்பிகையை நரசிம்ம தாரினி ரூபத்தில் வழிபட்டால் துன்பங்கள் உடனடியாக விலகும்.


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - குழப்பம்

ரிஷபம் - சோர்வு

மிதுனம் - வரவு

கடகம் - சுகம்

சிம்மம் - உழைப்பு

கன்னி - லாபம்

துலாம் - செலவு

விருச்சிகம் - முயற்சி

தனுசு - கோபம்

மகரம் - அச்சம்

கும்பம் - நன்மை

மீனம் - உயர்வு