எம்ஜிஆர் நிறுத்தியதுமே.. நானும் நிறுத்திட்டேன்.. கோட் பத்திக் கேட்டதும் ஓபிஎஸ் போட்ட போடு!

Meenakshi
Sep 06, 2024,04:29 PM IST

சென்னை: எம்.ஜி.ஆர் படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு, நானும் திரைப்படங்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.


திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், இந்தியா ஒரு மதசார் பற்ற நாடு. ஜாதி வேறுபாடு அற்ற இந்தியாவில் தமிழகம் உள்ளது.  இதில் யாரையும் பிரித்துப் பார்ப்பது என்பது முடியாது. அனைவரும் ஒன்றாய் பணியாற்றும் நிலையில் அனைவரும் ஒன்றாக வாழ்வதற்கு நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். 




2026 இல் மீண்டும் இந்த இயக்கத்தை நிறுவிய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆசியுடனும், இதய தெய்வம் அம்மா அவர்களின் நினைவில், இரு மாபெரும் தலைவர்களுடன் ஆசியோடு அதிமுக 2026ல் அணையில் ஏறுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இருக்கின்ற மெஜாரிட்டியை வைத்துக்கொண்டு வாரிசு வாரிசு என்று கூறி வருகின்றேன்.


விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் திரைப்படங்கள் நடிப்பதை நிறுத்தியவுடன் நானும் திரைப்படங்களை பார்ப்பதில்லை. முழுமையாக நிறுத்திவிட்டேன். 


முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க  சென்றிருக்கிறார். அவர் பெருவாரியான தொழில்களை ஈர்த்துக்கொண்டு வருவார் என வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்