பூசாரிகள்தான் ஜாதியை உருவாக்கினார்கள்.. கடவுள் அல்ல.. சொல்கிறார் மோகன் பகவத்

Su.tha Arivalagan
Feb 06, 2023,10:46 AM IST
மும்பை: நாட்டு மக்கள் அனைவரின் மனசாட்சியும், விழிப்புணர்வும் ஒரே மாதிரிதான் உள்ளது. அதில் எந்த வேறுபடும். கருத்துக்கள் மட்டுமே மாறுபடுகின்றன. ஜாதியை உருவாக்கியது கடவுள் அல்ல..  பூசாரிகள்தான் என்று கூறியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.



மும்பையில் துறவி சிரோமணி ரோஹிதாஸின் 647வது பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோகன்  பகவத் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நமது வாழ்க்கைக்காக இந்த சமூகத்திடமிருந்து சம்பாதிக்கிறோம். அதேபோல இந்த சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது. நாம் செய்யும் ஒவ்வொரு வேலையும் இந்த சமூகத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாக உள்ளபோது, அதில்  பெரிது என்றும் சிறிது  என்றும் எப்படி வேறுபடுத்திப் பார்க்க முடியும்.?

நம்மைப் படைத்தவனுக்கு நாம் ஒன்றுதான். சமமானவர்கள்தான். இங்கு ஜாதியும் கிடையாது, பிற பிரிவினைகளும் கிடையாது. இந்தப் பிரிவினையெல்லாம் பூசாரிகள் செய்தது. அது தவறானது. கடவுள் இதைச் செய்யவில்லை. நாட்டின் மனசாட்சியும், விழிப்புணர்வும் ஒன்றாகவே உள்ளது. அதில் எந்த வித்தியாசமும் இல்லை. கருத்துக்கள் மட்டுமே வேறுபடுகின்றன என்றார் அவர்.