வெளுத்து வாங்கும் கன மழை.. 3 மாவட்டங்களுக்கு விரைகிறது பேரிடர் மீட்புக் குழு

Aadmika
Dec 17, 2023,06:53 PM IST

நெல்லை : கனமழை எச்சரக்கை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்துள்ளது.


வங்கக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றத்த தாழ்வுநிலை காரணமாக நெல்லை, கன்னியாக்குமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. 




இந்த மாவட்டங்களில் ஏற்கனவே கொட்டி தீர்த்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கனமழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் அணைகளில் இருந்து அதிக அளவிலான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழை ஒருபுறம், வெள்ளம் ஒரு புறம் என நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் பெரு அவதிக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நெல்லை மாவட்டம் கூடங்குளம், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மிக அதிக அளவில் மழை அளவு பதிவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.




இதனால் நெல்லை, கன்னியாக்குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மழை நீரில் சிக்கி உள்ள மக்களை மீட்பதற்காக அரக்கோணத்தில் இருந்து தலா 25 பேர் கொண்ட 4 தேசிய பேரிடர் மீட்புக் குழுவை சேர்ந்த 100 வீரர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர்.