கேரளா, கோவை, மதுரையில் ரம்ஜான் இன்றே கொண்டாடப்பட்டது.. முஸ்லீம்கள் சிறப்புத் தொழுகை

Su.tha Arivalagan
Apr 10, 2024,09:38 AM IST

திருவனந்தபுரம்: தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவையிலும், மதுரையிலும் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது. இதேபோல கேரளாவிலும், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது.


தமிழ்நாட்டில் நேற்று பிறை தென்படவில்லை. இதனால் நாளை அதாவது வியாழக்கிழமையன்று ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கோவையில் பெரும்பாலும் சவுதி அரேபியாவில் எப்போது ரம்ஜான் கொண்டாடுவார்களோ அன்றுதான் இங்கும் கொண்டாடுவார்கள். சவூதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாடப்படுவதால் கோவையிலும் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது.




ரம்ஜானையொட்டி சிறப்புத் தொழுகையில் முஸ்லீம்கள் ஈடுபட்டனர். இதேபோல மதுரையிலும் பலர் இன்றே ரம்ஜானைக் கொண்டாடி மகிழ்ந்தனர். கேரளா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களிலும் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது.


திருவனந்தபுரத்தில் நடந்த ரம்ஜான் சிறப்புத் தொழுகையில்,  அந்தத் தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். முஸ்லீம்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முஸ்லீம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு ரம்ஜானைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.