மேற்குத் தாம்பரத்திலிருந்து கிளம்பி.. ரவுண்டடிச்சுட்டு.. மீண்டும் மேற்கு தாம்பரம். புது பஸ் அறிமுகம்

Su.tha Arivalagan
Sep 12, 2024,04:54 PM IST

சென்னை: சென்னை மேற்கு தாம்பரத்திலிருந்து புதிய சிற்றுந்து சேவையை மாநகர போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.


சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் புதிய புதிய பஸ் சேவைகளை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தொடங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக மேற்கு தாம்பரத்தில் ஒரு சிற்றுந்து சேவை தொடங்கப்படுகிறது.




இது சுற்றுப் பேருந்து சேவையாகும். அதாவது மேற்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு மீண்டும் மேற்கு தாம்பரத்திற்கே இந்த பஸ் வந்து சேரும்.  S55W என்ற இந்த சிற்றுந்து), மேற்கு தாம்பரத்திலிருந்து கிளம்பி, பெருங்களத்தூர், எஸ்.எஸ்.எம் நகர், கேம்ப் ரோடு, கிழக்கு தாம்பரம் வழியாக மீண்டும் மேற்கு தாம்பரத்திற்கு வந்து சேரும்.


காலை 5.15 மணிக்கு முதல் பேருந்து இயக்கப்படும். அதைத் தொடர்ந்து 7.40, 10.25, 1.10, 3.45 மற்றும் மாலை 6.25 ஆகிய நேரங்களில் இந்தப் பேருந்து இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்