அடேங்கப்பா சூப்பரு.. பொங்கலுக்கு மெட்ரோ ரயிலில் பயணித்த.. 8 லட்சம் பேர்!

Su.tha Arivalagan
Jan 19, 2023,10:27 AM IST
சென்னை: பொங்கல் விடுமுறையின் போது சென்னை மெட்ரோ ரயில்களில் மொத்தமாக  8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



ஜனவரி 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை பொங்கல் விடுமுறை தினங்கள்ஆகும். இந்த சமயத்தில் சென்னை மெட்ரோ ரயிலை பல லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர். மொத்தமாக 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளனர். இதில் விசேஷம் என்னவென்றால் ஜனவரி 13ம் தேதி மட்டும் 3 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளனர்.

அதிகபட்சமாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை 21,731 பேர் பயன்படுத்தி பயணித்துள்ளனர். கிண்டியில் 14,649, திருமங்கலம் 13,607, விமான நிலையம் 12,909 பயணிகள் பயனித்துள்ளனர். 

ஜனவரி 17ம் தேதி 1.65 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். தற்போது சென்னை மெட்ரோ ரயில்களில் தினசரி பயணிப்போர் எண்ணிக்கை சராசரியாக 2 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு ஏற்பாடுகளை மெட்ரோ நிர்வாகம் செய்திருந்தது என்பது நினைவிருக்கலாம்.