காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபடுவோம்.. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கமல்ஹாசன் ஆதரவு!
Jan 25, 2023,03:42 PM IST
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேதலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு தருவதாக அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிப்.27ம் தேதியில் நடைபெற இருக்கின்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மக்கள் நிதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
இதுத்தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி கலந்து பேசி ஆலோசித்தது. இதைத் தொடர்ந்து அதன் தலைவர் கமல் ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளரை சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக தெரிவித்தார்.
மேலும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றிக்கு நானும், எனது கட்சியினரும் பாடுபடுவோம் என்றும் தெரிவித்தார். இரு கட்சிகளின் கொள்கை வேறாக இருந்தாலும், தேச நலனுக்காக ஒரு மேடையில் அமர வேண்டும் என தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவு கொடுத்ததற்கா, கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.