"மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்".. ஸ்டாலின் நட்டு வைத்த மரக்கன்று!

Baluchamy
Mar 01, 2023,02:05 PM IST
சென்னை:   "மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்" என்று தனது 70 வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார்.   



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய 70 வது பிறந்தநாளை கொண்டாடினார். தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டம் களை கட்டியிருந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் திமுகவினர் பிறந்தநாள்  கொண்டாட்டத்தை தடபுடலாக்கியிருந்தனர்.



இன்று மாலை ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பிரமாண்ட பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தேசிய கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..


சச்சின் டெண்டுல்கரின் முழு உருவச் சிலை.. மும்பை வாங்கடே மைதானத்தில்.. விரைவில்!


ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தனர். இசையமைப்பாளர் இளையராஜாவும் வாழ்த்தியிருந்தார்.



இந்நிலையில் தனது 70 வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, பொன்முடி, துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

இதுதொடர்பாக ஸ்டாலின் போட்டிருந்த டிவீட்டில், "மரத்தை நாம் வளர்த்தால் மரம் நம்மை வளர்க்கும்!" என்றார் முத்தமிழறிஞர் கலைஞர். அவரது சொற்படி இந்த ஆண்டும் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தேன் என கருணாநிதியின் வசனத்தை சுட்டிக்காட்டி ட்விட் செய்துள்ளார்.