மே 25..  என்ன நல்ல காரியம் செய்யலாம்?

Aadmika
May 25, 2023,09:19 AM IST

இன்று மே 25, வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 11

வளர்பிறை சஷ்டி, சுபமுகூர்த்த நாள், மேல்நோக்கு நாள்


அதிகாலை 3 மணி வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. மாலை 05.49 வரை பூசம் நட்சத்திரமும், பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.52 வரை சித்தயோகமும், பிறகு மாலை 05.49 வரை அமிர்தயோகமும், அதன் பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


என்ன நல்ல காரியம் செய்யலாம்?


எதிர்ப்புக்களை வெற்றி கொள்ள, விவசாய பணிகள் மேற்கொள்ள, மல்யுத்த போட்டிகளில் கலந்து கொள்ள, தொழிலுக்கான உபகரணங்கள் வாங்குவதற்கு ஏற்ற நாள். 


யாரை வழிபட வேண்டும் ?


இன்று வைகாசி மாத வளர்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட காரியத் தடைகள் நீங்கும்.


இன்றைய நாள் யாருக்கு சாதகம்?


மேஷம் - சிக்கல்

ரிஷபம் - நஷ்டம்

மிதுனம் - பொறுமை

கடகம் - கவலை

சிம்மம் - ஊக்கம்

கன்னி - பயம்

துலாம் - நட்பு

விருச்சிகம் - முயற்சி

தனுசு - ஆதாயம்

மகரம் - அச்சம்

கும்பம் - எச்சரிக்கை

மீனம் - வெற்றி