மார்ச் 06 - இன்று என்ன செய்தால் பாவங்கள் தீரும் ?

Aadmika
Mar 06, 2023,09:31 AM IST

இன்று மார்ச் 06 திங்கட்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 22

வாஸ்து நாள். மாசி மகம். வளர்பிறை, கீழ் நோக்கு நாள்.


மாலை 05.38 வரை சதுர்த்தசி, அதற்கு பிறகு பெளர்ணமி திதி. இன்று நாள் முழுவதும் மகம் நட்சத்திரம். நாள் முழுவதும் மரணயோகமும் உள்ளது.


கீழடிக்கு வாருங்கள்.. மனிதகுலத்தின் தொல் நாகரீகத்தைப் பாருங்கள்.. ஸ்டாலின் பெருமிதம்


நல்ல நேரம் :


காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை 


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


இன்று என்ன செய்வதற்கு நல்ல நாள்?


மந்திர உபதேசம் பெறுவதற்கு, கிணறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, தற்காப்பு கலை சார்ந்த ஆலோசனை பெறுவதற்கு, வழக்கு தொடர்பான பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.


என்ன செய்தால் பாவங்கள் தீரும்?


இன்று மாசி மகம் என்பதால் ஆறு, குளம், கடல் போன்றவற்றில் நீராடலாம். இன்று புண்ணிய நீராடினால் பாவங்கள் தீர்ந்து, புண்ணியம் அதிகரிக்கும். மகம் நட்சத்திரம் முன்னோர்களுக்கு உகந்தது என்பதால் இன்று முன்னோர்களை வழிபட்டால் சுபிட்டசம் உண்டாகும்.