வரிகளில் ஆயுதம்.. இசையில் அற்புதம்.. மிரட்டிய பா.விஜய்.. கலக்கிய அனிருத்.. அசத்திய இந்தியன் 2!

Su.tha Arivalagan
May 23, 2024,09:53 PM IST

- அஸ்வின்


சென்னை:  இந்தியன் 2 படத்தில் இடம் பெற்றுள்ள "பாரா"பாடல் வெளியாகி பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளது. முதல் சிங்கிளே இப்படி அனல் கிளப்பும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பாடல் வரிகளைக் கொடுத்துள்ள கவிஞர் பா. விஜய், வரிகளில் வீரியத்தையும், வீரத்தையும் கலந்து கொடுத்து மிரள வைத்திருக்கிறார்.


கவிஞர் பா.விஜய் முதல்முறையாக அனிருத்துடன் இணைந்திருக்கும் இந்த பாடல் மிகவும் புரட்சிகரமான பாடலாக அமைந்திருக்கிறது. அவர் காதல் பாடல்களுக்குப் பெயர் போனவர், தத்துவப் பாடல்கள், அறிவுரைப் பாடல்கள், தன்னம்பிக்கைப் பாடல்களில் கை தேர்ந்தவர். அவரது ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே.. பாடலை ஒருமுறை கேட்டாலே போதும் ஒரு பத்து ஆண்டுகளுக்கு தெம்பு கிடைக்கும். அப்படிப்பட்டவர் முதல் முறையாக வீரம் செறிந்த பாடலைப் புனைந்துள்ளார்.




இந்தியன் திரைப்படம் ஒரு புரட்சிகரமான கதைக்களம் கொண்ட திரைப்படம். முதல் பாகத்தை போல இரண்டாம் பாகத்தையும் புரட்சி படமாகவே எடுத்துள்ளார் இயக்குநர் ஷங்கர். அதற்கு வலு சேர்க்கும் விதமாக கவிஞர் பா. விஜய் அவர்கள் அவர் வரிகள் மூலமாக இந்த பாட்டை இளைஞர்களுக்கு மோட்டிவேஷன் கொடுக்கும் பாடலாகவும் அமைத்திருக்கிறார். அனிருத் என்றாலே வேகம் அனிருத் என்றாலே இளமை இளைஞர்களுக்கு தேவையான இசையை அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் கொடுத்திருக்கிறார். 


இளைஞர்களை மையப்படுத்தி கதைக்களம் வருவது தற்பொழுது சர்வசாதாரணமாக ஆகி உள்ளது. இந்த படத்தையும் அப்படிதான் பார்க்கிறோம். லஞ்சம், ஊழல் குறித்துத்தான் இந்தியன் முதல் பாகம் பேசியது. இப்போது அத்துடன் மக்களைத் தட்டி எழுப்பும், இளைஞர்களை உசுப்பி எழுப்பும் புரட்சிகரமான படமாக இது இருக்கலாம் என்பதையே, இதில் இடம் பெற்றுள்ள  வரிகளும் விளக்குவதாக உள்ளது. இந்தியன் என்றாலே நமக்கு வைராக்கியமும் தன்னம்பிக்கையும்தான் வரும். இளைஞர்களுக்கு தேவையான கருத்துக்களை அவரது ஒவ்வொரு படங்களிலும் இயக்குனர் ஷங்கர் வைப்பார். அதேபோல இந்த திரைப்படமும் இன்றைய தலைமுறைக்கு ஒரு வழிகாட்டும் என்று நம்பலாம்.


பாரா பாடலை பற்றி மட்டும் நாம் பார்த்தோம் என்றால், வரிகள் ஆரம்பிக்கும் பொழுதே பீரங்கி, ஆயுதங்கள் வைத்து தான் இந்த பாடல் தொடங்குகிறது. ஆயுதத்தை வைத்து வரியா அப்படி என்று ஆச்சரியம் வருகிறது. வரிகளில் ஆயுதத்தையும் இசையில் அற்புதத்தையும் இவர்கள் இருவரும் இணைந்து நிகழ்த்தி இருக்கிறார்கள். வரியில் அற்புதத்தை பா விஜய் அவர்கள் நிகழ்த்தியிருக்கிறார். இசையில் அற்புதத்தை அனிருத் நிகழ்த்திருக்கிறார். இந்தப் பாடல் இளைஞர்கள் மத்தியில் இன்று தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் இதற்கு முழு காரணம் அனிருத் அவர்களும் பா.விஜயும்தான். 




அனிருத் இளைஞர்களுக்கு பிடித்த இசையமைப்பாளர். அவரே ஒரு இளைஞன்தான். இளைஞர்களுக்கு பிடித்த இந்த இசையை இளைஞர்கள் தாளம் போட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாடி நரம்புகளை புடைக்க வைக்கும் இந்தப் பாடலை திரையரங்குகளில் எப்படி ஆரவாரம் செய்து கேட்கப் போகிறார்கள் என்பதை நினைத்தாலே கூஸ்பம்ப்ஸ் ஆகிறது. எல்லா ஜாம்பவான்களுடன் பணிபுரிந்து உள்ளார் அனிருத். கமல்ஹாசனுடன் இரண்டு திரைப்படங்கள் முடித்திருக்கிறார். விக்ரமைத் தொடர்ந்து இரண்டாவதாக வரும் இந்த திரைப்படமும் கடந்த திரைப்படத்தின் பாடலை பீட் செய்து உள்ளது. அவரது ரெக்கார்டை அவரே முறியடிக்கிறார் என்றால் அது அனிருத்தாால்தான் முடியும்.


அசுரத்தனமான வரிகளை பா. விஜய் கொடுத்திருக்கிறார் என்றால், அனல் பறக்கும் இசையை அனிருத் அள்ளித் தெளித்திருக்கிறார். பா விஜய் அவர்களை பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். அவரது ஒவ்வொரு பாடலுமே முனுமுனுக்க வைக்கும்.. தெனாலியில் வரும் சுவாசமே என் சுவாசமே, வெற்றிக் கொடி கட்டு படத்தில் வரும் கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு.. சண்டக்கோழி படத்தில் வரும் முண்டாசு சூரியனே.. வா செல்லம் வா வா செல்லம்.. என்று அவரது ஹிட் லிஸ்ட் மிகப் பெரியது. ஒவ்வொரு பாடலையும் கேட்டதுமே முனுமுனுக்க வைப்பார். இப்போது இந்த பாரா மூலம் ஒரு மின்னல் போல பெரிய திரையில் ரீ ரிலீஸ் ஆகியிருக்கிறார் பா. விஜய்.