குரோதி தமிழ் வருட ராசிபலன் 2024 :  எதையும் சரிசமமாக எடுத்து கொள்ளும் துலாம் ராசி அன்பர்களே!

Aadmika
Apr 06, 2024,09:57 AM IST
எதிர்பாராத சில திருப்பங்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். திட்டமிட்ட சில பணிகளை அலைந்து முடிப்பதற்கான சூழல்கள் உருவாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். கிடைக்கும் வாய்ப்புகள் சிறிதாக இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்வது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். வழக்கு விஷயங்களில் சில புரிதல்கள் ஏற்படும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். பேச்சுகளுக்கு மதிப்புகள் ஏற்படும். 

சொத்து விஷயங்களை அனுசரித்து செல்வதன் மூலம் வில்லங்கங்கள் மறையும். அரசு சார்ந்த காரியங்களில் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். அனுபவ அறிவால் சில நெருக்கடியான பிரச்சனைகளை வெற்றி கொள்வீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். முகத்தில் பொலிவு கூடும். வரவுகளால் பொருளாதார நிலை சீரடையும். பேச்சாற்றல் மூலம் நண்பர்களின் வட்டம் விரிவடையும். குத்தகை செயல்களில் நபர்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள்.

வியாபாரிகளுக்கு:



கொடுக்கல் வாங்கலில் இருந்த தாமதங்கள் விலகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டு தொடர்புகளால் மேலும் ஆதாயம் மேம்படும். முதலீடுகளை மேம்படுத்தும் பொழுது தகுந்த ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு: 

உத்தியோக பணிகளில் திறமைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். எதிர் பாலின மக்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. வெளியூர் வேலை வாய்ப்புகளை சிந்தித்து முடிவெடுப்பது தேவையற்ற விரயங்களை தவிர்க்கும். அலுவல் பணிகளில் எதையும் சமாளிக்கும் பக்குவம் உருவாகும்.

கலைஞர்களுக்கு:

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு உழைப்புகள் மேம்படும். அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். ஒப்பந்த விஷயங்களில் பொறுமை காக்கவும். பிடித்த துறைகளில் சில நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்வீர்கள். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். எதையும் தைரியமாக சமாளிப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு:

அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். புதிய முயற்சிகளில் சில நுணுக்கங்களை தெரிந்து கொள்வீர்கள். கட்சி தலைமை இடத்தில் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. விலகி சென்ற தொண்டர்கள் மீண்டும் வருவார்கள். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிராக செயல்பட்டவர்களை வெற்றி கொள்வீர்கள்.

பெண்களுக்கு:

மனதளவில் இருந்துவந்த கவலைகள் படிப்படியாக குறையும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. நீண்ட காலமாக தடைபட்டுவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடத்தி வைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளின் செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். முயற்சிகளில் இருந்த மறைமுக தடைகளை அறிந்து செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு:

மாணவர்களுக்கு கல்வியில் படிப்படியாக முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய விஷயங்களை திட்டமிட்டு கற்றுக் கொள்வது நல்லது. நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மனத்தெளிவை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல்கள் ஏற்படும். மேல்நிலைக் கல்வியில் அனுகூலமான வாய்ப்புகள் உருவாகும்.

வழிபாடு:

வியாழக்கிழமை தோறும் பிரம்மதேவரை வழிபாடு செய்துவர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும்.