ஈரோடு இடைத் தேர்தல் முடியட்டும்.. "ஒரே ஒரு அதிமுக"தான் இருக்கும்.. கடம்பூர் ராஜு

Su.tha Arivalagan
Jan 22, 2023,11:15 AM IST

கோவில்பட்டி: ஈரோடு இடைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் எந்த அணியும் இருக்காது. ஒரே அணிதான், எடப்பாடியார் தலைமையிலான அதிமுக மட்டுமே இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.



தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கடம்பூர் ராஜு பேசினா். அப்போது அவர் பேசுகையில், ஆயிரம் எதிரிகளைக் கூட எளிதாக சமாளித்து விட முடியும். ஆனால் ஒரே ஒரு துரோகியை சமாளிப்பதுதான் சங்கடமானது. 

2021 சட்டசபைத் தேர்தலுக்கு ஒரே தலைமை என்ற முடிவை எடுத்தோம். ஆனால் அதை தேர்தலுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால், எடப்பாடியார் தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும்.

ஈரோடு இடைத் தேர்தல் பெரும் திருப்புமுனையாக இருக்கும். இந்தத் தேர்தல் முடியட்டும்.. அந்த அணி இந்த அணி என்று எந்த அணியும் பிறகு இருக்காது. ஒரே அணி, அது எடப்பாடியார் தலைமையிலான அதிமுக மட்டுமே இருக்கும் என்றார் கடம்பூர் ராஜு.