10 மாவட்ட அலுவலகங்கள்.. திறந்து வைத்தார் நட்டா.. பக்காவாக தயாாகும் பாஜக!

Baluchamy
Mar 10, 2023,01:16 PM IST

சென்னை: தமிழக பாஜக சார்பில் 10 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகங்களை தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா திறந்து வைத்தார்.


தமிழக பாஜகவுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அலுவலகம் உள்ளது. ஆனால் சில மாவட்டங்களில் உள்ள பாஜக அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களில் உள்ளன. மேலும் சில ஊர்களில் உள்ள பாஜக அலுவலகங்கள் கட்சி நிர்வாகிகளின் சொந்த இடங்களில் செயல்பட்டு வந்தது.



இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தமிழக பாஜகவுக்கு என சொந்த கட்டிடம்  கட்ட தீர்மானிக்கப்பட்டு முதல் கட்டமாக 15 மாவட்ட அலுவலகங்களுக்கு கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா அடிக்கல் நாட்டினார். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான வடிவத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 10 கட்டங்கள் இன்று திறக்கப்பட்டன.


கிருஷ்ணகிரியில் நடந்த நிகழ்ச்சியில் ஜே.பி. நட்டா, மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி தவிர தருமபுரி, புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சி, விழுப்புரம், தேனி, திருவள்ளூர், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்ட இந்த அலுவலகங்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நட்டா திறந்து வைத்தார்.