பொண்டாட்டியை விட புடவைதான்டா கரெக்டா மரியாதை தருது!

Aadmika
Aug 15, 2023,02:43 PM IST

சென்னை: சுதந்திர தினம் எப்படிப் போச்சு.. நல்லபடியா கொடியேத்தி முட்டாயெல்லாம் வாங்கி சாப்பிட்டாச்சா.. அப்படின்னா வாங்க ஜாலியா நாலு ஜோக்ஸ் பார்த்து மனசை ரிலாக்ஸ் ஆக்கலாம்.

மனைவி : ஏங்க நான் வரும் போது மட்டும் ஏன் கண்ணாடி போடுறீங்க?
கணவன் : டாக்டர் தான் சொன்னார் தலைவலி வரும் போது மட்டும் கண்ணாடி போடுங்கன்னு சொன்னாரு...!!

--

நீதிபதி : நீ செய்த குற்றத்திற்காக உனக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன்.
குற்றவாளி : எத்தனை கிலோ வெயிட் தூக்கனும் சார்?

--

அவன்: பொண்டாட்டியை விட பொடவதான்டா நமக்கு கரெக்டா மரியாதை தருது
இவன்: எப்படிச் சொல்றே
அவன்: அதுதானே பீரோவைத் திறந்ததும் முதல் வேளையா நம்ம கால்ல விழுது!

--



அப்பா: என்னடா அம்மா காலைலருந்து கம்முன்னு இருக்கு.. பேச்சையே காணோம்
மகன்: சத்தமா பேசாதப்பா.. உனக்கு நல்லதுதான் செஞ்சிருக்கேன்.
அப்பா: அப்படியா.. அப்படி என்னடா எனக்கு நல்லது செஞ்சிருக்க மகனே
மகன்: அம்மா வச்சிருந்த லிப்ஸ்டிக்கை எடுத்துட்டு அதுக்குப் பதில் பெவிஸ்டிக்கை வச்சுட்டேன்ப்பா
அப்பா: ஆஹா.. நீ சாமிடா!